Wednesday, February 9, 2011

நாளைய விடியலின் நேயர்கள் வரும் பதிவுகளை சமவெளியில் காணவும்

www.samaveli.bogspot.com

Wednesday, January 19, 2011

அன்புள்ள முதல்வருக்கு...........

பொங்கலுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆவதற்கு காரணம் விழா நாளின் போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அப்படி சிறந்த நகைச்சுவை பட்டிமன்றம் ஒன்று ஒளிபரப்பு ஆனது அதன் தலைப்பு "கலைஞரின் புகழுக்கு காரணம் அவரது சமூக தொண்டு, இலக்கிய பணி, அரசியல் சாதனை". இந்த தலைப்பில் தீ.க, காங்கிரஸ், தீ.மூ.க கட்சியை சேர்ந்த பலர் பேசினர் ஆகையால் இந்த பட்டிமன்றம் முழுவதும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இதில் ஆளுக்கு ஒரு தலைப்பில் புதுகோட்டை விஜயா, தமிழச்சி தங்கபாண்டியன், பீட்டர் அல்ப்போன்ஸ், பொன்முடி, ஜகத் ரத்ச்சகன், துறை முருகன், கீ.வீரமணி என அனைவரும் பேசினர். இதில் சுப.வீரபாண்டியனும், கனிமொழியும் பேசியது என்னை மிகவும் கவர்ந்தது.

கனிமொழி சமூக தொண்டு என்று ஆரம்பித்து சிலநிமிடங்கள் வரை "அவர் ஏன் மேடையில் அழுகிறார்?" என்ற கேள்வியோடு பார்த்து கொண்டிருந்தேன் பிறகு தான் தெரியவந்தது அவர் அழவில்லை பேசுகிறார் என்று. அவர் பேச ஆரம்பித்தவுடன் "தமிழருக்கு சூடு பிறக்க வேண்டும் சுரணை பிறக்க வேண்டும் என்று கலைஞர் சமூக தொண்டு ஆற்ற வந்தவர் என்றார்" இதை கேட்ட எனக்கு சிரிப்பை அடக்க இரண்டு நிமிடம் ஆனது.

சுப.வீரபாண்டியன் பேசியது "பம்பரம் கலைங்கருக்கு சின்னமாக இருப்பதை விட்டுவிட்டு யார் யாருக்கோ சின்னமாக இருக்கிறது என்றார்" காரணம் இவர் பம்பரம் மாதிரி சுழல்கிராராம். பத்தாத குறைக்கு "நிர்க்கமுடியாதவன் எல்லாம் நிற்பேன் என்கிறான்" என்று விஜயகாந்தை ஜாடையாக சொன்னார். இப்படியே அனைவரும் கலைங்கருக்கு கடைசிவரை ஜால்ரா போட்டதை முதல்வர் கண்சிமிட்டாமல் பார்த்து பூரித்துக்கொண்டிருந்தார்.
இறுதியாய் அன்பழகன் தீர்ப்பு என்று ஒன்றை சொல்ல இனிதை முடிவடைந்தது சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்.

கேரளா, கர்நாடக, ஆந்த்ரா என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது தமிழகம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் என்று சிறப்பான கவிதையை பாடி தமிழர்களுக்கு தமிழ் நாட்டின் பெருமையை உணர்த்தியவர். ரயில் வராது என்பதை உறுதி படுத்தியபின் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தவர்.இப்படி இவர் சாதனைகள் அளப்பரியது.

பொங்கலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னாள் தான் தமிழக மீனவர் கொலை சிங்கள ராணுவம் அட்டூழியம் என்பதை பார்த்தோம். இவர் இது நாள் வரை கடிதத்தை எழுதுகிறாரே அன்றி எந்த பயனும் இல்லை. அந்த இன வெறி பிடித்த சிங்களவன் கொல்வதை நிறுத்துவது போல் தெரியவில்லை. பிராந்திய வல்லரசான இந்திய மீனவனுக்கே இந்த நிலை என்றால் ஈழத்தமிழரை பற்றி நாம் நினைக்க வேண்டும். தன் மக்கள் அவலத்தை வைத்து அரசியல் பண்ணும் கேடு கெட்ட அரசியல் தமிழக அரசியலாகத்தான் இருக்கும். ஐந்து நிமிட உண்ணா விரதத்தினால் முப்பது ஆண்டு போரை நிறுத்தத்திற்கு கொண்டு வந்த சர்வ வல்லமை படைத்த அரசியல்வாதி இவராகத்தான் இருக்கமுடியும். எப்படியேனும் வாகுகளை பெற வேண்டும் என்பதே இவர்களின் கொள்கை.

இலவசம், இலவசம் என்று எதற்கு எடுத்தாலும் இலவசம். கையாலாகாத சோம்பேறிகளுக்குத்தான் இந்த இலவசம் தேவையே அன்று நமக்கு அல்ல. இப்படி நீங்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள நாங்கள் உங்கள் பட்டி நாய்கள் அல்ல என்பதை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும். உழைக்காமல் வரும் ஊதியம் அதிக நாள் நிலைக்காது என்று அவர் படிக்கவில்லையோ என்னவோ? நமக்கு தெரியவில்லை. உலக தமிழரின் தலைவரான இவர் ஈழ தமிழருக்கு என்ன செய்தார் என்பதை அனைவரும் பார்த்தோம். நாற்ப்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சியாய் இருந்தும் இவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இவரால் தமிழகம் என்ன பயன் அடைந்ததோ?. இவர் நொடிக்கு நொடி உலக தமிழரின் தலைவன் என்று சொல்லும் போது ஈழ தமிழர்கள் சிரிக்க மாட்டார்கள். களப்பிரர்களுக்கு பிறகு தமிழகத்துக்கு இதுவே இருண்டகாலமாக இருக்க முடியும்.

நம் தமிழர்களின் நிலை தான் என்னே! பரிதாபமானது ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்தோம், பிறகு பார்பனரின் ஆதிக்கம், பிறகு சினிமாவின் ஆதிக்கம், அடுத்தது இவர் குடும்பத்திற்கு ஆதிக்கம் கை மாறுமே அன்றி தமிழர்களின் அடிமை நிலையில் எந்த மாற்றமும் இல்லை. "காலுக்கு செருப்பும் இல்லை பசித்த பிள்ளைக்கு பாலும் இல்லை உழைத்து உழைத்து மண்ணாய் போனோமட தமிழா" என்று வேதனை படும் விவசாய்கள் எத்தனை. இது தான் தமிழக அரசியலும் தமிழகமும்.

இந்த தமிழர் திருநாளில் நாம், இனவெறி பிடித்த சிங்களனுக்கு சொல்வது இது தான் "இலச்சம் பேர் மடிந்தாலும், ஆயிரம் ஆயிரம் பேர் முள் வேலிக்குள் கிடந்தாலும் தமிழரின் தன்மானத்தை, இன உணர்வை, வீரத்தை எவனாலும் அழிக்க முடியாது. இன்று உங்கள் கை ஓங்கியிருக்கிறது. உயிரிழந்த அப்பாவி தமிழர்களும், மீனவர்க்கும் மண்ணில் விழுந்த விதைகளாக மீண்டும் எழுவார்களே அன்றி குப்பையை போல் மக்கிப்போக மாட்டார்கள். நீங்கள் வென்றதாய் கனவில் கூட நினைக்க வேண்டாம்".

என்றாவது ஒரு நாள் விடியும். இந்த நிலை மாறும் தமிழர்கள் மகிழ்ச்சியாய், அரசியல் உரிமைகளோடு, சுதந்திரமாய், சுரண்டல் இல்லாத சமுதாயமாய், நல்ல தலைவர்களோடு, மானத்தோடு வாழும் நாளும் வரும். நமது லச்சியமில்லாத பயணம் இப்படி ஒரு இலக்கு நோக்கி பயணிக்கட்டும். இதுவே இந்த தமிழர் திருநாளில் நம் உறுதிமொழியாக இருக்கட்டும்.

Wednesday, January 5, 2011

லச்சியங்களும் பயணங்களும்...............

நம் மாணவர் சமுதாயத்தில் இன்று கனவு காணும் இளைங்கர்கள் பலர் இருந்தாலும் அந்த கனவுகள் சொல்லும்படி பெரிய குறிக்கோளை கொண்டதோ அல்லது ஒரு பெரிய இலச்சியத்தை அடைவதாக இருக்கும் படியாக எனக்கு தோன்றவில்லை. என் சக நண்பர்கள் பலருக்கு லச்சியம் செட்டில்(settle) ஆவதாம். அந்த செட்டில் என்ற ஆங்கில வார்த்தைக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் நீண்டு கொண்டே போனாலும் இதன் சாராம்சம் 'எந்த வித அக்கரயும் யார் மீதும் இல்லாமல் தானும் தன் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பது'. என்னே அற்புதமான கனவு, தீரிய சிந்தனை என்பதை நாம் உணரலாம்.

இதற்க்கு காரணம் சூழ்நிலை என்று பலர் சொல்வதை நான் கேட்டேன் அதாவது சூழ்நிலை காரணமாக சுயநலமாக இருக்கிறார்களாம் என்னே ஒரு அற்புதமான விளக்கம். உண்மையில் இவர்கள் பாடத்தை தவிர மற்ற புத்தகங்களையோ, செய்தித்தால்கலையோ படிக்க நினைப்பது கூட இல்லை. இதனால் மாணவர்கள் கிணத்து தவளைகள் போலவே இருக்கிறார்கள். காக்கைக்கும் குருவிக்கும் கூட வித்யாசம் தெரியாத அளவுக்கு. மீடியா குறிப்பாக இன்றைய தமிழ் சினிமாக்கள் இயன்றவரை மாணவர்களை சீரழிக்கிறது. "சில்லினு ஒரு காதல்" என்ற படம் இது போன்ற உயர்ந்த குறிக்கோள்களை(settle) மாணவர்களுக்கு விதைத்தது.
நம்பிக்கை வரட்சியில் வாடும் நம் மாணவர்களுக்கு செட்டில் ஆவது ஒரு பெரிய சாதனையாகவே தெரிகிறது. அப்படி செட்டில் ஆன பின் அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போய் வந்து விட்டால் அது ஒரு பாரதரத்னா விருது வாங்கியதற்கு சமமாக எண்ணுவார்கள். இப்படி சிந்திக்கும் மாணவர்களால் யாருக்கும் எந்த வித பயனும் இல்லை.

குறிக்கோள் போகட்டும் இவர்களின் பொழுது போக்கு பற்றி சொல்லியே தீரவேண்டும். Facebook, Farmville என்ற அறிவு சார்ந்த செயல்களில் பொழுது முழுவதயும் போக்குவது. Farmville என்பது ஒரு வேளாண்மை செய்யும் விளையாட்டு. நான் பார்த்த வரையில் இது விளையாடும் அனைவரும் ஆடு, மாடு, பன்றி என்று கணினியில் வகை வகையாக மேய்க்கிறார்கள். இவர்களின் பெற்றோர் ஆடு, மாடு மேய்த்து பையன் சிரமப்படக்கூடாது என்று தான் கல்லூரியில் சேர்த்தார்கள் ஆனால் இவர்கள் கல்லூரியிலும் பன்றி வரை மேய்ப்பது வருந்தத்தக்கது. இதில் என்னை வேறு பலர் அழைத்த(request) வண்ணம் இருக்கிறார்கள் அவர்களுக்கு என் பதில்,"நண்பர்களே நான் கல்லூரிக்கு படிக்க வருகிறேன் பன்றி மேய்க்க அல்ல". இப்படியும் பொழுது போகவில்லை என்றால் ஒருவரை தேடி பிடிப்பார்கள். ஒருவன் கிடைத்துவிட்டால்(நகைக்க) இவர்களுக்கு சக்கரை சாப்பிட்டதற்கு சமம் ஏதாவது ஒன்று அவனை பற்றி பேசி பொழுதை ஓட்ட வேண்டும். குறிப்பாக ஏதாவது ஒரு சமூக சிந்தனை உள்ள மாணவன் எதாவது சொல்லமாட்டானா என்று பனங்காட்டு நரி போல பார்த்துக்கொண்டே இருப்பார்கள் எதாவது சொல்லிவிட்டால் போதும் அன்றைய பொழுது அவன் விளையாட்டுப்பொருள் தான்(எனது அணுபவம்).

"உள்ளத்தனையது தான் உயர்வு" நினைப்பதாவது உயர்வாக நினையுங்கள். பிறகு அதற்கு ஏற்ப உயர்வு இருக்கும். செட்டில் ஆவது ஒரு குறிக்கோளோ லட்ச்சியமோ அல்ல. படித்துத்தான் செட்டில் ஆக வேண்டும் என்பதில்லை. படிக்காமல் வாழும் அனைவரும் செட்டில் ஆகவில்லையா என்ன. உணவு உடை இருப்பிடம் இவை சரியாக கிடைப்பது செட்டில் என்ற வார்த்தைக்கு சரியான பொருளாகும். ஆகையால் எதாவது சாதிக்க வேண்டும் என்று கனவு காணுங்கள். செட்டில் ஆவதை ஒரு லச்சியமாகவே கொண்டிருக்காதீர்கள். இந்த இலச்சியத்தை கையால் ஆகாதவர்கள் மட்டுமே கொண்டு இருப்பார்கள் ஆகையால் இந்த லச்சியம் நமக்கு துளிகூட பொருந்தாது.



Tuesday, December 28, 2010

விநாயகர்...........

விநாயகர் கோயில் இந்தியாவில் மக்கள் வசிக்கும் வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் விநாயகரின் சக்தி தான் என்று பல பூசாரிகள் தெரிவித்தனர். இந்த கதையை கேட்டவுடன் நானும் விநாயகரின் பரம பக்த்தன் ஆகி விட்டேன். இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்த கதை இதோ

விநாயகரின் சக்தி:
விநாயகருக்கு மிகவும் பிடித்தது கொழுக்கட்டை தான். அவர் டயட்டில் இருந்தாலும் கூட கொழுக்கட்டை தான் சாபிடுவாரம். அதனால் தான் இந்த கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்திக்கு கூட அதிக அளவில் செய்து விநாயகருக்கு கொடுக்கிறார்கள். இந்த கொழுக்கட்டை நாளடைவில் இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை என்று பல விதமாக பரிமாணம் எடுத்தது.

விநாயகரும் அறிவியலும்:
சரி கதைக்கு வருவோம். ஒரு விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் அதிகமாக கொழுக்கட்டையை சாப்பிட்டு விட்டார். அது இரவு நேரம் வேறு. அதிகம் சாப்பிட்டதால் நடக்க முடியாமல் திணறிய விநாயகர் கீழே விழுந்து விட்டார். இதை பார்த்த சந்திரன் சிரித்துவிட்டார் அதனால் கோவமடைந்த விநாயகர் சந்திரனை பார்த்து "நீ அழகாய் உள்ள ஆணவத்தில் தானே என்னை பார்த்து சிரிக்கிறாய் அதனால் நான் உன்னை சபிக்கிறேன் மாதத்தில் தேய்ந்து தேய்ந்து ஒருநாள் தெரியாமல் போய்விடுவாய் மீண்டும் வளர்ந்து வளர்ந்து ஒருநாள் மட்டுமே தெரிவாய்" என்றார் விநாயகர். இதனால் தான் மாதம் ஒரு முறை பௌர்ணமியும் அம்மவாசையும் வருகிறது. விநாயகர் சபிப்பதற்கு முன்னாள் வரை தினமும் பௌர்ணமியாகவே இருந்ததாம். பார்த்தீர்களா? இது தான் விநாயகரின் சக்தி.

எங்கள் கல்லூரியில் உள்ள விநாயகர் கோவிலில் பக்த்தர்கள்(மகளிர்) கூட்டம் "என்னடா இன்று விநாயகர் சதுர்த்தியா?" என்று சந்தேக்கப்படும் அளவுக்கு அலைமோதும். இந்த பக்தர்கள் தினமும் வருவதையும் போவதையும் தினமும் காண்பவர் கல்லூரி watchmam. "என்னுங்க நம்ம கல்லூரியில் பகத்தர்கள் அதிக மாயிட்டே போற மாதிரி தெரியுது? இன்னைக்கு சுண்டலும் இல்லை பொங்கலும் இல்லை அப்பறம் எதற்கு இத்தனை கூட்டம்?" என்று நான் கேட்க, அவர் "அதெல்லாம் ஒன்னும் இல்லை இன்று தேர்வு நடக்கிறதாம் அதான் இத்தனை கூட்டம்" என்றார்.

இந்த பக்தர்களில் ஒருவரை கேட்டதற்கு அவர் "நான் விநாயகர கும்பிட்டிட்டு போனேன்னா நான் paas பன்னிடுவேன்" இதனால் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிப்பது எனவென்றால் படித்தால் தான் மதிப்பெண் வருமே அன்றி கும்பிட்டால் வராது. ஆஞ்சநேயர் விவேக்குக்கு படத்தில் உதவுவதை போல நமக்கு விநாயகர் உதவுவார் என்று கனவு காண வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது உங்கள் நாளயவிடியல்.

Sunday, December 19, 2010

தமிழர்கள் தீயவர்கலாம்..

நம் தமிழ் இனத்தில் நல்லவர்களே பிறக்க மாட்டார்களா? நம் இனம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது இப்படியெல்லாம் என்னை சிந்திக்க வைத்தது சில வரலாற்று சம்பவங்கள் தான். ஏதோ எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முதலில் ராமாயணத்தில் ராவணன் கெட்டவனாக சிறப்பாக சித்தரிக்கப்பட்டான். சரி ராவணன் கெட்டவனாக இருக்கட்டும் அவன் தம்பி விபீஷணன் "தான் என்றுமே நல்லவனாக இருக்க வேண்டும்" என்று வரம் வாங்கினான். அவனும் ராவணனை ஆதரிக்காமல் நல்லவனாகவே இருந்தான். எனினும் அவன் கெட்டவனாம் காரணம், தம்பி போரில் தன் அண்ணனை ஆதரிக்கவில்லையாம். (என்ன கொடும சார் இது?)

சரி இது போகட்டும் பலர் இந்த கதையை நம்புவது கூட கிடையாது. ஆனால் நம்புமாறு ஒரு வரலாற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அது தான் சித்தூர் கொங்கன் படை திருவிழா. அந்தக்காலத்தில் பாலக்கடும் கொங்கு நாடும் இந்தியா பாகிஸ்த்தனை போல இருந்ததாம். 918AD யில் கொங்கு நாட்டிற்க்கும் பாலக்கட்டிர்க்கும் போர் ஆரம்பித்து விட்டது. கிழக்கில் ராசாதி ராசன் தலைமையிலான கொங்கு நாட்டு ராணுவமும் மேற்கில் ஒருங்கிணைந்த கொச்சின், சமோரின், பாலக்காடு மான்னர்களுக்கும் இடையே போர் துவங்கியது. ஒருங்கிணைந்த கேரளா ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கொங்கு நாட்டு ராணுவம் பின் வாங்கி போர் முடிவுக்கு வந்த்ததாம். இந்த வெற்றியைத் தான் சித்தூர் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இதற்க்கு இடையில் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான கதை உள்ளது. போர் நடந்த சித்தூரில்,காளியே நேராக போர் களத்திற்கு வந்து
"சித்தூர் தாண்டுனா காட்பாடி
பாலக்காட்ட சீண்டுனவன் dead body"
என்று சொல்லி கடுமையாக போரிட்டு தமிழர்களின் தாக்குதலை முரியடித்ததாம். அந்த கடவுளுக்கு மக்கள் மீதுள்ள அக்கரையை பாருங்கள். தமிழனை அளிக்க கடவுள் கூட போர் களத்திற்கு வருவாராம்.

இப்படி பட்ட கடவுள் அனைவருக்கும் பொதுவாக இருந்தால் ஈழப்போரில் தமிழனை காக்க வந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இதுவரையில் நடக்கவில்லை இனியும் நடக்கப்போவதில்லை. தமிழனை அளிக்க துடிக்கும் இனங்கள் தான் எத்தனை எத்தனை.
இதற்க்கு காரணம் தான் என்னவோ?. இவை தமிழனின் அழிவோடு போவதில்லை. இதை சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பது தான் எனது வருத்தம். கொங்கன் படை கிபி 918 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வரலாறு தமிழரில் பலருக்கு தெரிந்திருப்பதாக தெரியவில்லை. இதிலும் குறிப்பாக கொங்கு நாட்டு மன்னன் ஏன் போர் தொடுத்தான்? என்ற வரலாறு எனக்கு கிடைக்கவில்லை கிடைத்தால் அதை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய நிலை தமிழன் அழிந்தால் அழுவதற்கு கூட ஆள் இல்லை. வழக்கம் போல உலகமே கொண்டாடி மகிழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு அணுகுங்கள் இதை:
http://www.webindia123.com/city/kerala/palakkad/destinations/eventsandfestivals/chitturkonganpada.htm

http://chitturfolks.webs.com/knowchittur.htm

ஒரு நாள் விடியும்.............